நாசரேத், ஜூலை 8, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரத சாரணர் இயக்கத்தின் சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து, இந்தக் கல்வி ஆண்டில் புதிதாக இணைந்துள்ள சாரணர் இயக்க மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். சாரணர் இயக்க பொறுப்பாசிரியர்கள் ஆபிரகாம் இமானுவேல் மற்றும் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோர், சாரண இயக்கத்தின் தோற்றம், வரலாறு மற்றும் அதன் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். சாரணர் அணியும் சீருடையின் முக்கியத்துவம், மற்றும் பிற சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.
சாரணர் இயக்க மாணவர்கள் வணக்கம் செலுத்தும் முறை, ஒருவரோடு சந்திக்கும்பொழுது கை கொடுக்கும் முறை ஆகியவற்றின் புதுமை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாரணர் இயக்க மாணவர்களையும், பொறுப்பாசிரியர்களையும் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக