மாற்றுத்திறனாளி வீடு இல்லை என்று மனு அளித்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்டஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

மாற்றுத்திறனாளி வீடு இல்லை என்று மனு அளித்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்டஆட்சியர்!

மாற்றுத்திறனாளி வீடு இல்லை என்று மனு அளித்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்டஆட்சியர்!
திருப்பத்தூர், ஜுலை 14 -

திருப்பத்தூர் மாவட்டம்மாற்றுத்திறனாளி களுக்கான மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று திருப்பத்தூர் மாவட்ட
ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை யில் நடைபெற்றது. மேலும் ஆம்பூர் பகுதி யைச் சேர்ந்த பாட்ஷா என்பவர் இன்று மனு அளித்தார் அதில் குறிப்பிட்டு இருந் தது 2023 ஆம் ஆண்டு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது  மேலும் எனக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா சோலூர் பகுதியில் இருப்பதால் எனக்கு வீடு கட்டுவதற்கு பண வசதியோபொருள் வசதியோ இல்லை ஆகையால் எனக்கு இலவச வீடு கட்டுவதற்கு அல்லது வங்கிக் கடனும் பெற்று தரவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது பின்பு கூட்ட த்தில் மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் சிவசவந்தரவல்லி உடனடியாக தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என
ஆணையிட்டார் இதனால் மாற்றுத் திறனாளிகளிடையே பெரும் மகிழ்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad