தூத்துக்குடி மாவட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம் குறித்து முன்னேற்பாடு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

தூத்துக்குடி மாவட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம் குறித்து முன்னேற்பாடு கூட்டம்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.07.2025), "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.


"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை. வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்கள். 

இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும். என அறிவித்திருந்ததன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் துவக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 270 முகாம்கள் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று. முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள். அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

கலைஞர் மகளிர்உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி. 07.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. 

இப்பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1071 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இப்பணியை கண்காணித்திட 175 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை வட்டாட்சியர்கள் கண்காணித்திட வேண்டும் எனவும், முகாமிற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். 

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்தார்.

இந்த முன்னேற்பாடு கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், வருவாய் கோட்டாட்சியர்கள் ம.பிரபு (தூத்துக்குடி), க.மகாலட்சுமி (கோவில்பட்டி), சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad