சிவகங்கை மாவட்டத்தில் 20.8.25 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்.
சிவகங்கை மாவட்டம் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமானது வருகின்ற 20.8.2025 அன்று சிவகங்கை நகராட்சி, கண்டனூர் பேரூராட்சி, கல்லல், மானாமதுரை, இளையான்குடி ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவைகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான முகாம்கள், குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாமானமது, சிவகங்கை மாவட்டத்தில் 15.7.2025 அன்று முதல் செப்டம்பர் 2025 வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி, 15.7.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடர்ந்து, வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1,2,3,4,5,6 ஆகிய பகுதிகளுக்கென மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்திலும், கண்டனூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 1 முதல் 9 வரை மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கென கண்டனூர் வார்டு எண்: 7, ரதக்கொட்டகை தெருவில் அமைந்துள்ள கோதை ஆச்சி திருமண மண்டபத்திலும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெளியாத்தூர், மேலபட்டமங்களம், கீழபட்டமங்களம், நரியங்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென பட்டமங்களம் ஊராட்சியில் அமைந்துள்ள நகரத்தார் கல்யாண மண்டபத்திலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செய்களத்தூர் ஊராட்சி பகுதிக்கென செய்களத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்திலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர், எஸ்.கீரனூர், வாணி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கென வாணி ஊராட்சியில் அமைந்துள்ள வாணி அங்கன்வாடி மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது நடைபெறவுள்ளது.
மேலும், ”உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களின் வாயிலாக, நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அந்தந்த துறைகளால் சேவைகள் வழங்கப்படும். அதில், நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
இதில் சொத்துவரி, குடிநீர் வசதி உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், காலி நிலவரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவைகள் நகர்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.
மேலும், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளும் இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம்.
எனவே, இம்முகாமினை முறையாக பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் வசிக்கும் அந்தந்த பகுதியில் முகாம் நடைபெறும் நாளன்று, உரிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக