கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம்–12 இல் உள்ள என்எல்சி நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, வட்டம்–19 தமிழர் பண்பாட்டு கழக கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர் ரமணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக என்எல்சி பள்ளிக்கல்வித் துறை மற்றும் விளையாட்டு துறை பொது மேலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு வட்டம்–12 என்எல்சி நடுநிலைப் பள்ளியில் படித்த சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கோவிந்தம்மாள் ஆகியோரை மாணவர்கள் அழைத்து வந்து கௌரவித்தனர்.
முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தங்கள் குழந்தைகளுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்தனர். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இச்சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை மீண்டும் பகிர்ந்து கொண்டு மறுமலர்ச்சியை அனுபவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக