வயதான தம்பதியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர் ஆர் காந்தி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 16 -
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற் றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களிடம் இன்று வாலாஜா ஒன்றியம் சுமைதாங்கி ஊராட்சி தர்ம ராஜா கோவில் தெருவில் கடந்த புதன் கிழமை 13. 8. 2025 அன்று தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த போது வள்ளியம்மாள் ராமன் என்ற வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் குடியிரு க்கும் வீட்டிற்கு பட்டா வேண்டும் என அமைச்சர் இடம் கோரிக்கை வைத்தனர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடு க்க உத்தரவிட்டார் அதன்படி வயது முதி ர்ந்த தம்பதியினர் கோரிக்கையை தீர்வு காணப்பட்டு வருவாய்த் துறையின்மூலம் உடனடியாக பட்டா தயார் செய்து நேரடி யாக வீட்டிற்கு வருகை தந்து வள்ளியம் மாள் ராமன் அவர்களிடம் பட்டடா ஆணை யை வழங்கி நடவடிக்கை எடுத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனை வர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஒன்றிய குழு தலைவர் செ வெங்கட ரமணன், வட்டாட் சியர் ஆனந்தன் கடப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் அரசு அதிகா ரிகள் உடன் இருந்தனர் .
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக