ராணிப்பேட்டையில் தூய்மை பணியா ளர்கள் கைது கண்டித்து சிஐடியு ஆர்ப் பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

ராணிப்பேட்டையில் தூய்மை பணியா ளர்கள் கைது கண்டித்து சிஐடியு ஆர்ப் பாட்டம் !

ராணிப்பேட்டையில் தூய்மை பணியா ளர்கள் கைது கண்டித்து சிஐடியு ஆர்ப் பாட்டம் !          

ராணிப்பேட்டை , ஆகஸ்ட் ‌-

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை மாந கராட்சி தூய்மைப் பணியாளர்களை எவ் வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்வதோடு,தனியார்மயத்தை கை விட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும்.பல ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறு த்திதிங்களன்று (ஆக 18) சிஐடியு மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் என். ரமேஷ் தலைமையில் முத்துக்கடைபேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னை மாநகராட்சி தூய் மைப் பணிகள் தனியார்மயத்தை எதிர் த்து கடந்த 13 நாட்களாக வெயில் மழை பாராமல்நியாயமான கோரிக்கைகளுக் காக ரிப்பன் மாளிகை முன்பு அமைதி யான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வராமல் அப்பாவி தூய்மைப் பணியாளர் களை பலவந்தமாக கைது செய்து கை பேசி பறிப்பது, பெண் தொழிலாளர்களை மிரட்டுவதுபோன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் சென்னை மாநகர காவல்துறையின் அத்துமீறல் கண்டிப் பதோடுபோராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கண்டன முழக்கங்களை எழுப் பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர்பி. ரகுபதி, சிஐடியு மாவட்ட அமைப்பாளர் ஆ. தவராஜ், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் ஏபிஎம். சீனிவாசன், காமராஜ், பி. மணி, ஆர். மணிகண்டன், தா. வெங்கடேசன், எஸ். முரளிதாஸ், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கேகேவி. பாபு, வாலிபர் சங்க நிர்வாகி செந்தில் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad