திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில், கஞ்சா விற்பனை நடப்பதாக தாராபுரம் மது விலக்கு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகதாநன் மற்றும் போலிசார் அங்குசென்று கண்காணித்தனர். அப்பொது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பீடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகும்குமார் (வயது 28) என்பதும், பல்லடம் குங்குமம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1. கிலோ 100-கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக