பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை:
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர். ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர்
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தென் தாமரைகுளம் பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயது குறைவாக வாகனம்
ஓட்டி வந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களிடத்தில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக