இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை 20 கோடி ரூபாய்யில் புதுப்பிக்கபட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை 20 கோடி ரூபாய்யில் புதுப்பிக்கபட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வருகை 20 கோடி ரூபாய்யில் புதுப்பிக்கபட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் புதிய திட்ட பணிகள். கள ஆய்வு, மாவட்டத்தில் மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.;

ராமநாதபுரம், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக வருகிற 29-ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதல்-அமைச்சர் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதோடு, ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடத்துகிறார்.

தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் ராமநாதபுரத்திலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் இரவு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் 30-ந் தேதி காலை ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். 

தொடர்ந்து ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

குறிப்பாக ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். முதல்-அமைச்சரின் வருகை காரணமாக இராமநாதபுரம் நகர்,பாரதிநகர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் மராமத்து மற்றும் தூய்மை பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad