ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெற்ற இந்த சந்தையில், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்தனர். இதனால், ஜவுளிச்சந்தை களைகட்டியதுடன், மொத்த வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக