கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் பயணியர் விடுதி அருகே பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுகடை மற்றும் பார் - ஆகியவற்றை அகற்றக்கோரி இளைஞர் காங்கிரஸார் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இந்த கையெழுத்து இயக்கம் வாயிலாக மதுவின் தீமையை குறித்து மக்களுக்கு எடுத்துரைப்போம் எனவும் ,
கையெழுத்துகள் பெறப்பட்ட புகார் மனுவை முதல்வரிடத்தில் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக