நீலகிரி மாவட்டத்தில் திமுக செயற்குழு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

நீலகிரி மாவட்டத்தில் திமுக செயற்குழு கூட்டம்

 


நீலகிரி மாவட்டத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


 நீலகிரி மாவட்ட தி மு க செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை  தலைவர்  போஜன்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ  அனைவரையும் வரவேற்றார்.  கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா  கா.ராமசந்திரன், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் கழக முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது,


மற்றும் தலைமை கழகத்தின் சார்பில், முப்பெரும் விழாவில் விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தும், 


ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்ப்பு பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அணைவருக்கும் நன்றி கூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


 இக்கூட்டத்தில் மாவட்ட  துணைச்  செயலாளர்கள்  ரவிகுமார்,  லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி,  தலைமைச்  செயற்குழு  உறுப்பினர்கள்  இளங்கோவன், திராவிடமணி, செந்தில் ரங்கராஜ், தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், நகர  செயலாளர்கள்  ஜார்ஜ்,  ராமசாமி,  இளஞ்செழியன், ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் காமராஜ், நெல்லை கண்ணன், தொரை,  பிரேம்குமார்,  பீமன்,  சிவானந்தராஜா, சுஜேஷ், ராஜ்குமார், ஜெகதீசன், உத்தமன், தலைமை பொதுக்குழு  உறுப்பினர்கள் கருப்பையா,  சதக்கத்துல்லா,  லியாகத் அலி,   செல்வம், உதயதேவன், ராஜேந்திரன், அமிர்தலிங்கம், மகேஷ், காளிதாசன், வாணீஸ்வரி, பேரூர்  கழக  செயலாளர்கள்  உதயகுமார், நடராஜன், சதீஸ்குமார், சுந்தர்ராஜ், காளிதாஸ், சஞ்சீவ்குமார், முத்து, ரமேஷ்குமார், சின்னவர், சுப்ரமணி, மார்டின்,  மாவட்ட அணிகளின்  அமைப்பாளர்கள்  சசிகுமார்,  கோமதி, ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி, ராம்குமார், ரஹமத்துல்லா, ஜெயந்தி, வெங்கடேஷ், பவீஷ், செந்தில்நாதன், ஜெயகுமார், சுரேஷ், பவீஷ், மாவட்ட  இளைஞர்  அணி துணை அமைப்பாளர்கள் நௌபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், வினோத்குமார், நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, ஜெயகுமாரி, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி,  கௌரி, சித்ராதேவி, வள்ளி,  ஹேமமாலினி, ராதா,  தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், உட்பட கழக நிர்வாகிகள்  கலந்துக்கொண்டனர் .


செயற்குழு  கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.                                   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad