இரண்டு தலை துண்டித்து கொலை செ ய்த என்னை வேலூர் மத்திய சிறையில் அடைக்கும் படி பாதுகாவலரிடம் கேட்ட கொலையாளி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 செப்டம்பர், 2025

இரண்டு தலை துண்டித்து கொலை செ ய்த என்னை வேலூர் மத்திய சிறையில் அடைக்கும் படி பாதுகாவலரிடம் கேட்ட கொலையாளி!

இரண்டு தலை துண்டித்து கொலை செ ய்த என்னை வேலூர் மத்திய சிறையில் அடைக்கும் படி பாதுகாவலரிடம் கேட்ட கொலையாளி!
வேலூர் , செப் 15 -

கள்ளக்காதலனுடன் இருந்த இரண்டா வது மனைவி தகாத வார்த்தையால் திட்டி யதால் ஆத்திரமடைந்த கணவன் இருவர் தலையையும் துண்டித்த செயல் அப் பகுதியில் மிக பரபரப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைக் கோட் டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கொளஞ்சி, இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கொளஞ்சியின் மனைவி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை கொளஞ்சியி டம் விட்டு விட்டு தனியே வாழ்ந்து வந்துள் ளார். பின்னர் கொளஞ்சி பக்கத்துக்கு ஊரை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். கொளஞ்சிக்கும் லட்சுமிக்கும் மூன்று பெண்குழந்தைகள் பிறந்த நிலையில் ஆறு குழந்தைகளுடன் கொளஞ்சி மற் றும் லட்சுமி ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் லட்சுமிக்கு அதே ஊரைச் சேர்ந்த கந்தன் என்பவற்றின் மகன் தங்கராசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அண்ட் பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. தங்கராசுவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என்று மொத்தம் நான்கு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக் கது. இவர்களின் உறவை பற்றி அக்கம் பக்கத்தினர் கொளஞ்சியிடம் தெரிவித்த நிலையில் மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கொளஞ்சி கடந்த செப். 10ம் தேதி மாலை தனது மனைவி லட்சுமியி டம் வெளியூர் சென்று வருவதாக கூறி விட்டுச் புறப்பட்டுள்ளார். ஆனால் மீண் டும் கொளஞ்சி நள்ளிரவிலேயே வீடு திரும்பியுள்ளார். அப்போது கொளஞ்சி யின் வீட்டு மாடியில் தங்கராசுவும் லட்சு மியும் நின்று பேசிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கொளஞ்சி இது குறித்து லட்சுமியிடம் விசாரித்துள் ளார். அதற்கு லட்சுமி மற்றும் தங்கராசு ஆகிய இருவரும் கொளஞ்சியை தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்திய தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட  கொளஞ்சி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து லட்சுமி மற்றும் தங்கராசுவை வெட்டி தலையை தனியாக துண்டித்துள்ளார். பின்னர் இருவரின் உடலையும் வீட்டில் போட்டு விட்டு தலை களை சாக்கு பையில் போட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தலைகள் உள்ள சாக்கு பையை எடுத்து கொண்டு கள்ளக் குறிச்சியில் இருந்து பேருந்து மூலம் வே லூர் சென்று வேலூர் மத்திய சிறைக்கு வந்து தன்னை சிறையில் அடைக்கும்படி அங்கிருந்த பாதுகாவலரிடம் கேட்டுள் ளார். பாதுகாவலர் அவரை அமர வைத்து ஜெயில் வாடனுக்கு கொளஞ்சி குறித்து தகவல் கொடுக்க, அவர் உடனடியாக பாகாயம் காவல் நிலையத்திற்கும் கள்ள க்குறிச்சி காவல் நிலையத்திற்கும் தக வல் கொடுத்துள்ளார்.  தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீசார், ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.இதன் அடிப்படை யில் கள்ளக்குறிச்சி போலீசார் வரும் வரை இரண்டு தலைகள் மற்றும் கொள ஞ்சியையும் பாதுகாப்பாக வைத்திருந்த னர். பின்னர் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆய்வாளர் மலர்விழி வேலூர் மத்திய சிறைக்கு வந்து கொளஞ்சி எவ்வாறு அந்த தலையை கொண்டு வந்தார் என்கி ன்ற ஒத்திகையை செய்து காண்பிக்க சொல்லி அதன் அடிப்படையில் தற்போது கொளஞ்சியை கள்ளக்குறிச்சி கொண்டு சென்றுள்ளனர். இரண்டு தலைகளை ஒரே சாக்கு மூட்டையில் போட்டு கள்ளக் குறிச்சியில் இருந்து பேருந்து மூலம் வேலூருக்கு வந்த கொளஞ்சியை வழியில் யாரையாவது சந்தித்தாரா? எப்படி அந்த தலையை மறைத்து எடுத்து வந்தார்? என்கின்ற கோணத்தில் போலீ சார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad