குடியாத்தம் செருவங்கி பகுதி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது!
குடியாத்தம் , செப் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
செருவங்கி பகுதியில் கஞ்சா விற்பதாக குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் வந்தது. டிஎஸ்பி சுரேஷ் உத்தரவில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையி லான போலீசார் செருவங்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது செருவங்கி பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் அருகே நின்றிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.விசாரணை யில் நெல்லூர் பேட்டை தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தும் தெரியவந்தது. நகர போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக