ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஆறு முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிணைப்பு குறித்து இ.பி.எஸ்.ஸிடம் பேசிய பிறகு, கழகத்தின் பொதுவான கருத்துகளை என்னிடம் இதுவரை அழைத்து பேசவில்லை என்றும், பேச முன்வரவில்லை என்றும் தெரிவித்தார். இ.பி.எஸ்.ஸின் மனநிலை தனக்குத் தெரியாது என்றும், ஆனால் கோடானுகோடி தொண்டர்களின் மனநிலை கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என்றும் அவர் கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக