சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் திருநங்கைகள் சாலை மறி யல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் திருநங்கைகள் சாலை மறி யல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் திருநங்கைகள் சாலை மறி யல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு!
வாணியம்பாடி, செப் ‌19 -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலை, தர்ஜிபேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள்வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கன மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் மழை நீர் மற்றும் ஏரியில் இருந்து வெளி யேறி வரும் கால்வாய் நீர் ஆகியவை முறையான மழை நீர் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த 30-க்கு மேற்பட்ட திருநங்கைகள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டு மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீ ஸார், வருவாய்த்துறை, நகராட்சி துறை யினர், திமுக நகர செயலாளர் சாரதி குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த திருநங்கைகளிடம் பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது திருநங்கைகள் அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் மழைநீர் உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad