புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தூத்துக்குடி, ஸ்பிக்நகர், செப். 20- முத்தையாபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபரை கைது செய்தனர்
முத்தையாபுரம் அருகேயுள்ள சுந்தர் நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் , எஸ்ஐ ராமகிருஷ்ணன், எஸ்ஐ முகிலரசன், எஸ்எஸ்ஐ வடிவேல் தலைமை காவலர்களான ஜெகன், உள்ளிட்டோர் பகலில் ரோந்து பணியில் இருந்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகதிற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் கையில் பையுடன் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர் விருதுநகர் கல்லுபட்டியை சேர்ந்த ராமசாமி(53) என்பதும் விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கூல்லிப், புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருள் சுமார் 20 கிலோ இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார்
அவரிடம் இருந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடிமாவட்டம் தமிழககுரல்செய்திக்காக
செய்தியாளர் கணேஷ்.மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக