தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்டக 10,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிர்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்டக 10,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிர்ச்சி!

தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்டக 10,000  ரூபாய் கள்ள நோட்டுகள் அதிர்ச்சி! 
ராணிப்பேட்டை , அக் 31 -

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்டக 10,000  ரூபாய் கள்ள நோட்டுகள் அதிர்ச்சி! கள்ளப் பணத்தை கொடுத்த 6 பேரை ராணிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
யுடியூப் பார்த்த கள்ள நோட்டுகள் தயாரித்தது விசாரணையில் அம்பலம்.
ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த நபர்கள் வழங்கிய பணத்தில் கள்ளப்பணம் இருப்பது தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.வாலாஜாபேட்டை கடப்பரங்கையன் தெருவை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 41). இவரது மனைவி கோசலை(வயது 38). கோசலையின் 5 சவரன் தங்க நகையை கடந்த மே மாதம், முத்துராமன் அடகு வைத்து 2,23,000 ரூபாய் பணத்தை பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில் முத்துராமன் தான் வைத்திருந்த லாரியை தனக்கு தெரிந்தவரான ராமு(வயது 55) என்பவரிடம் சொல்லி விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். லாரியை வாங்குவதற்காக வாலாஜாபேட்டையை சேர்ந்த அஸ்கர் பாஷா(வயது 49), கீழ்புதுப்பேட்டை அன்னை காளிகாம்பாள் நகரைச் சேர்ந்த சர்தார்(வயது48), மற்றும் மேல்விஷாரத்தைச் சேர்ந்த வசீம்(வயது 42), இப்ராஹிம், வாலாஜாபேட்டை சேர்ந்த சிவா(வயது 42) ஆகியோர் இணைந்து லாரியை பணம் கொடுத்து வாங்கியுள் ளனர். லாரி விற்ற பணத்தில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை மீட்பதற்கு 2,35000 ரூபாய் பணத்தை முத்துராமன் வங்கியில் செலுத்தியுள் ளார். வங்கி காசாளர் அந்த பணத்தை இயந்திரம் மூலம் எண்ணும் போது அதில் 10,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.அதை தொடர்ந்து வங்கி மேலாளர் ராஜராஜன் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் முத்துராமன் மற்றும் கோசலை ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் லாரி விற்ற பணத்தை வங்கியில் செலுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் லாரியை வாங்கிய ராமு, அஸ்கர், சர்தார், வசீம், சிவா, இப்ராஹிம், ஆகிய 6 பேரை  பிடித்து காவல்துறையி னர் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது இல்லத்தில் நடத்திய சோத னையில் கள்ள நோட்டு அடித்த மெஷின், தயாரித்த கணினி ஆகியவற்றை வைத் திருந்தது உறுதியானது. மேலும் யுடியூப் பார்த்து கள்ள நோட்டுகளை இப்ராஹிம் தயாரித்ததும் விசாரணையில் அம்பல மான  நிலையில் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் மாவட்ட 

சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad