தொடர் பைக் திருட்டு - மூன்று இளஞ்சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

தொடர் பைக் திருட்டு - மூன்று இளஞ்சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்று இளஞ்சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப் புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின் படி மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்ல சிவம், மேற்பார்வையில் ஆய்வாளர். அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் மகேந்த் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் இந்தத் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் என்பவரின் மகன் பிஜோய்(20) மற்றும் மூன்று 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad