ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவிப்பு!
ராணிப்பேட்டை , அக் 23 -
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக மழையின் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக பிரதான பைப் லைன் சேதம் மற்றும் பழுதடைந்து உள்ளதால், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள் ளது.இதனால் அந்தந்த நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள உள்ளூர் நீர் ஆதார த்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக