இன்று அக்:31, இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு மூக்குபேரி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டிக்கு பள்ளியின் தாளாளர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் A. கென்னடி, நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தலைமை காவலர்கள் வேல்பாண்டியன், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல். ஜாஸ்மின் ஏஞ்சல் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக