காட்பாடியிலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தர வசதியாக நகரப் பேருந்துகள் இயக்கப் பட கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 அக்டோபர், 2025

காட்பாடியிலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தர வசதியாக நகரப் பேருந்துகள் இயக்கப் பட கோரிக்கை!

காட்பாடியிலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தர வசதியாக நகரப் பேருந்துகள் இயக்கப் பட கோரிக்கை!
வேலூர் , அக் 13 -

 வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் இன்று  காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் மு.பாஸ் கரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலா ளர் எம்.எஸ்.தீனதயாளன் வேலை அறிக் கையும் மாவட்ட பொருளாளர் சுமதி பொருளாளர் அறிக்கையும் சமர்ப்பித்து பேசினார்கள் மாவட்டத் துணைத் தலைவர்கள் ம.தேவசேனன், தே.வேந்தன் மாவட்ட இணைச் செயலாளர் மு.இளந் தமிழன் மகளிர் துணைக் குழு அமைப் பாளர் ச.ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் ச.ஹேமச்சந்திரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசி னார்கள்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற் குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார் த்தனன், ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆசீர்வாதம் முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் வே.விஜயகுமரன் நிறைவு பேருரை ஆற்றினார் முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.சபரிகிரிவாசன் நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
2. ஏழாவது ஊதியக்குழு மாற்றத்தின் 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும் 3. சத்துணவு அங்கன் வாடி வருவாய் கிராம ஊழியர்கள் ஊர் புற நூலகர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக் கும் காலமறை ஊதியம் சட்டபூர்வ ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் 4. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் மதிய உணவு அருந்த அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.5. காட்பாடியிலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு வருகை தர வசதியாக நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
6. கே வி குப்பம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய வட்டாட்சியர் அலுவலக அமை விடத்திற்கு வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் வட்டாட்சியர் அலுவலகத் தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்.7. சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்கால மாக முறைப்படுத்தி நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் 8. மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி வசூலிக்காதே கிராமப்புற இளைஞர் களுக்கு காலமுறை ஊதிய நடைமுறை யில் பணி வழங்கி நிரப்பிட வேண்டும் 
9. அரசுத் துறைகளில் காலிப் பணியிடங் கள் அனைத்தையும் கிராமபுற இளைஞர் எங்களுக்கு காலம் வரை ஊதிய நடை முறையில் பணி வழங்கி நிரப்ப வேண்டும்,10. அரசு துறைகளில் தனியார் மய புகுத்தல் அவுட்சோர்சிங் முறை ஒப்பந்த நியமன முறை உள்ளிட்ட நடைமுறைகளை கைவிட வேண்டும்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad