ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம் பர்-18ல் அடையாள வேலை நிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!
காட்பாடி ,நவ 13 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூ திய திட்டம் அனைவருக்கும் நடைமுறை படுத்த கோருதல், 23.08.2010 க்கு முன்ன தாகப் பணியில் சேர்த ஆசிரியர்களுக்க டெட் தேர்விலிருந்து விலக்கறித்து ஆசிரியர்களை பாதுகாத்திட கோருதல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோருதல், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பணியாற்றும் ஆசிரியர் பணியாளர் அனைவருக்கும் பணிநிரந் தரம் செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 18.11.2025ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கோரி பிரச்சார இயக்கம் இன்று நான்காவது நாளாக காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பகுதியில் நடை பெற்றது.அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளிலும் வட்டாட்சியர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், அக்ரி இராமன் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், ஆ.ஜோசப்அன்னையா அல்போன்ஸ்கிரி, திருக்குமரன், அ.சேகர், எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் முன்னி லையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது இந்த நிகழ்வில் வட்டார நிர்வாகிகள் உறுப்பு சங்க நிர்வாகிகள் அனைவரும் இப்பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக