அன்பு உள்ளங்கள் மற்றும் முதியோர் மையம் திறப்பு விழா.
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் அன்பு உள்ளங்கள் இணைந்து முதியவர்களுக்கான அன்பு சோலை மையம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்புச் சோலை என்ற உன்னத திட்டத்தை ஆரம்பித்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் நேரலை காணொளி மூலமாக துவக்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்புச் சோலை இல்லத்தை ரிப்பன் கட் பண்ணி திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் அலுவலர் பிரேமலதா ,மாவட்ட கண்காணிப்பாளர் ஹேமலதா, பாதுகாப்பு அலுவலர் செல்வமிர்சி, இளநிலை பொறியாளர் மகாராஜன் , அன்பு உள்ளங்கள் நிர்வாகி விஜயா, சத்யாசாமுவேல் மற்றும் எஸ் தங்கதீபா தலைமையேற்றி நடத்தினார்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக