ஸ்ரீவைகுண்டம் நவ 6. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதி ஆன ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் அவதார தினமான ஐப்பசி அசுவதி நட்சத்திர நாளான நேற்று கருடசேவை நடந்தது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு மூலவர் வைகுண்டபதி பால் திருமஞ்சனம். பின்னர் 10.30 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார்.
ஸ்தபன திருமஞ்சனம். அலங்காரம் . தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அத்யாபகர்கள் சீனிவாசன். கண்ணன். சீனிவாச தாத்தம் சேவித்தனர். சாத்துமுறை நடந்தது. தீர்த்தம். சடாரி. பிரசாதம். பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் 8 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார். தை வீதி உலா வந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர்.வாசு பட்டர் ராமானுஜ பட்டர்.சீனுபட்டர். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா
உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம்.பேக்கரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். உபயதாரர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக