ஆட்டோ ஓட்டுநர் சங்க அன்னதான குழு வின் சார்பில் ஆசிரியர் ஜனார்த்தனனு க்கு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

ஆட்டோ ஓட்டுநர் சங்க அன்னதான குழு வின் சார்பில் ஆசிரியர் ஜனார்த்தனனு க்கு பாராட்டு!

 ஆட்டோ ஓட்டுநர் சங்க அன்னதான குழு வின் சார்பில் ஆசிரியர் ஜனார்த்தனனு க்கு  பாராட்டு!
வேலூர் , நவ 5 -

வேலூர் மாவட்டம் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 19வது மாதமாக இன்று வேலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில்  அன்னதானம் செய்தனர் மேலும் இந்த நிகழ்வில் பங் கேற்ற ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்னனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச்செயலர் நீலசந்திர குமார் எனது ஆசிரியர் என கூறி சால் வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.  
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்கள் மற்றும் தேவையுள் ளவர்களுக்கு மதிய உணவு மாதத்தின் முதல் நாளில் உணவு வழங்க முடிவெடுத் தனர்.  அதன் அடிப்படையில் இன்று  வேலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் தலைவர் எம்.எம். மணி தலைமையில் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் அமைப்பு செயலாளர் நீலசந்திரகுமார் அன்னதானத்தினை துவக்கி வைத்தார்.மேலும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவரும் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியரு மான செ.நா.ஜனார்த்தனன் எனது ஆசிரியர் என கூறி விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலர் சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டார்.  இந்த நிகழ்வில் செயலாளர் குமரேசன், பொருளாளர் பவன்குமார், குமார், வெங்கடேசன், சிவக்குமார், சுரேந்தர், கே.சாந்தகுமார், மற்றும்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நிகழ்வில் 50 பேருக்கு மரக்கன்றுகளையும் வழங்கி னர்.வேலூர் புதிய பேருந்து நிலையத் தில் 200 பேருக்கு அன்னதானம் செய்தனர்.அன்னதானம் 19 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad