ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாரத்தில் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கணக்கீடு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கீழக்கரை வட்டம் கீழக்கரை நகர் பகுதி பொக்கரனேந்தல், இதம்பாடல், நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கீடு படிவம் வழங்கியதை பார்வையிட்டதுடன் வாக்காளர்களிடம் படிவம் பூர்த்தி செய்வதன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வாக்காளர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கீழக்கரை வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக