பழைய ஓய்வூய திட்டம் மீண்டும் நடை முறை படுத்தக்கேரி அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 டிசம்பர், 2025

பழைய ஓய்வூய திட்டம் மீண்டும் நடை முறை படுத்தக்கேரி அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது!

பழைய ஓய்வூய திட்டம் மீண்டும் நடை முறை படுத்தக்கேரி அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் 200 பேர் கைது!
வேலூர்  ,டிச 4 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறை வேற்ற வில்லை ஏமாற்றப்பட்டோம் மீண்டும் போராட்ட பதாகையை உயர்த் திப் பிடிப்போம் என்ற கோஷங்களோடு இன்று 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 12அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மறியல் செய்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.மறியல் போராட் டத்திற்கு மாவட்ட தலைவர் டிடி ஜோஷி தலைமை தாங்கினார் மாவட்ட செயலா ளர் எம் எஸ் தீனதயாளன் மாவட்ட பொரு ளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது உசேன் சிறப்புரையாற்றினார்.  முன்னாள் மாவட்ட செயலாளர்  ராஜாமணி மறியல் போராட்டத்தினை  துவக்கி வைத்தார்.    ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பி னர் முனைவர்செ. நா. ஜனார்த்தனன் பல்வேறு துறைகளை சார்ந்த நிர்வாகி கள் வருவாய் துறை ரமேஷ் ஊரக வளர் ச்சித்துறை பா வேலு, சத்துணவுத்துறை கல்வித்துறை தேவசேனன்,  துரைராஜ் ஏழுமலை முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். 
வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை மருத்துவத்துறை  அளவைத் துறை சத்துணவு துறை கிராம உதவியாளர் பட்டு வளர்ச்சி துறை  மேலும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துபழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும், காலியாக உள்ள இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறை படுத்த வேண்டும்,  கருணை அடிப்படையில் பணி நியமனங்களை 25 சதவீதமாக தொடர வேண்டும், பெண் அரசு ஊழியர்க ளுக்கு அரசு சிறப்பு திட்டங்களை அமல் படுத்த வேண்டும்,  அவுட்சோர்சிங் முறை ஒப்பந்த ஊதியம் தொகுப்பூதிய முறை ரத்து செய்து அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தில் 50 பெண் ஊழியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேன்கள் மூலமாக அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad