ஆழ்வார்திருநகரி டிசம்பர் 2. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதி நாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவைச நடந்தது. காலையில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருக்குறுங்குடி பர்வதமலையில் நம் பாடுவான் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் தினசரி திருக்குறுங்குடி நம்பியை இசை பாடி வழிபாட்டு வந்தார்.
கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியை முன்னிட்டு காட்டு வழியாக வரும்போது பிரம்ம ராட்சஷன் வழிமறித்து மனித மாமிசம் உண்ணும் படியாக நம்பாடுவானை தின்னப் போனான். நம் பாடுவான் தான் நம்பியை இசை பாடி வழிபாட்டு வந்தபின் உண்ணும் படி கேட்டுக் கொண்டான்.
அதற்கு ராட்சஷன் போனவன் என்றாவது திரும்பி வருவானா என்று அவனை வழி மறித்தான்.. நம் பாடுவான் 18 விதமான பாவங்களை சொல்லி வராமல் போனால் இந்த பாவங்கள் அடைவேன் என்று சொன்ன பின் ராட்சஷன் சம்மதித்தான். நம் பாடுவானும் நம்பியை இசை பாடி வழிபாட்டு திரும்பினான். இடையில் நம்பி மாறுவேடத்தில் வந்து போனால் உயிர் போகும் எனவே திரும்பி வேறு பாதையில் போக சொல்கிறார்.
ஆனால் நம்பாடுவான் உயிர் போனாலும் வார்த்தை தவற மாட்டேன் என்கிறான். நம்பி பக்தி மற்றும் சத்தியத்தை காப்பாற்றுகின்ற நம்பாடுவானை வாழ்த்தி அனுப்புகிறார். நம்பாடுவான் ராட்சஸன் முன் நிற்கிறான். ராட்சஷன் அவனுடைய உயிரை விட்டு அவன் புண்ணியத்தை முழுவதும் பின்னர் பாதியும் கால் பகுதியும் சிறிதளவேனும் கேட்டு மன்றாடுகிறான்.
அவன் உயிரைக் தவிர புண்ணியத்தை தர சம்மதிக்க வில்லை. பின்னர் ராட்சஷன் தான் பிரம்மகத்தி தோஷம் பெற்று இந்த நிலையில் உள்ளதாகவும் உன் போல் ஒருவனால் புண்ணியத்தை பெற்று சாபவிமோசனம் கிடைக்கும் என சாபம் என்றான். நம் பாடுவான் புண்ணியத்தை வழங்கினான். ராட்சஷன் சாபவிமோசனம் பெற்றான்.
இந்த கைசிக புராணம் ஸ்ரீ வராகப் பெருமானால் பூமி பிராட்டிக்கு சொல்லப்பட்டது. சுவாமி பொலிந்து நின்றபிரான்ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். ஆழ்வார் குறட்டிற்கு நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆசாரியர்கள் எழந்தருளினார்.
பின்னர் அண்ணாவியார் பாலாஜி ஆதி நாதன் பெருமாள் முன்னிலையில் கைசிக புராணம் வாசித்தார். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம். சடாரி. பிரசாதம் வழங்கப்பட்டது.
அண்ணாவியார் பாலாஜி ஆதிநாதன் மரியாதை செய்யப்பட்டு பிரம்ம ரதத்தில் அவர் திருமாளிகை கக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மாடவீதி சுற்றி வந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜன் உறுப்பினர்கள் கிரிதரன். ராமலட்சுமி. காளிமுத்து. செந்தில். கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக