திருப்பத்தூர் அருகே 400 பானைகள் வைத்து திராவிட பொங்கல் வைத்த ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு!
திருப்பத்தூர் , ஜன 13 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் தலைமையில் நத்தம் ஆதித்திரவிடர் குடியிருப்பு பகுதியில் 400க்கும் மேற்பட்ட பானைகள் வைத்து ஒரே மாதிரியான புடவை அணிந்து திரவிடப் பொங்கல் வைத்தனர்.இந்த திராவிட பொங்கல் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர் பொங்கல் விழாவில் உரியடித் தல் கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டி களும் நடைபெற்றது. உடன் இந்த நிகழ்ச் சியின் போது கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன் தலைமை செயற் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், திருப்பத்தூர் தொகுதி பார்வையாளர் ரமேஷ்,கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக