வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ் சாலையில் திடீரென லாரி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு !
வாணியம்பாடி, ஜன.13 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி கொழுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சிமெண்ட் மிக்சிங் லாரியை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேதண்டபட்டி அருகே லாரியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு லாரியின் முகப்பு பகுதியில் கேஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்த னர் அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குக்கர் வெடித்து சுரேஷ் படுகாயம் அடைந்து லாரியின் முகப்பு பகுதியில் இருந்து கீழே குறித்து உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து லாரி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது திடீரென லாரியில் இருந்த சிலிண்டரும் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் லாரி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.மேலும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று லாரி ஓட்டுனர் சுரேஷ் மற்றும் உதவியாளர் கோகுல் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரியிலேயே அமர்ந்து சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் லாரி கொழுந்து விட்டு எறிந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக