அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாவட்ட எல்லைக்குள் நுழைந்த கனரக வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக மாவட்ட எல்லைக்குள் நுழைந்த 07 கனரக லாரிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக