திருவண்ணாமலை மாநகராட்சியில் பொங்கல் டோக்கன் வழங்கும் பணி களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
திருவண்ணாமலை ,ஜன 7 -
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக் கால் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக் கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தர்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண் டாட விதமாக தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, மற்றும் வேட்டி சேலை, ரொக்கம் ரூ.3,000 வழங்க அறிவித்துள் ளது இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு தொகுப்பு பொருள்கள் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.மேலும், வருகிற ஜன.8-ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனை த்து நியாய விலைக் கடைகளிலும் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படவுள் ளன.இதையொட்டி, எந்த நாளில், எந்த நேரத்தில், நியாய விலை கடைக்கு வர வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் வீடுகள் தோறும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் துறை சாா்ந்த அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் க.தா்பராஜ் திருவண்ணாமலை யில் டோக்கன் வழங்கும் பணியை பாா் வையிட்டு ஆய்வு செய்தாா்.குடும்ப அட் டையில் பெயா் இடம் பெற்றுள்ள நபா் களில் யாரேனும் ஒருவா் நேரில் வந்து கைரேகையை பதிவு செய்து பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை செய்தியாளர்
-T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக