13 ஜனவரி 2026, நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழா நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளி தலைவர் சகோதரி எலிசபெத் ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் மாணவ, மாணவியர்களுக்கு தமிழர் திருநாள் பற்றியும், பொங்கல் திருநாள் சிறப்பினையும் முன்னோர்கள் வாழ்ந்த விதத்தினையும் எடுத்துரைத்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் பொங்கல் பானையின் அடுப்பை பற்ற வைத்து துவங்கினார்.
மாணவ மாணவிகளுக்கு பொங்கல் திருநாள் பேச்சுப்போட்டி நடனம், மாறுவேட போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மாணவி அப்ரா பாத்திமா தொகுத்து வழங்கினார்.
பொங்கல் விழாவில் மாணவ மாணவியர்கள் நம் பாரம்பரிய உடையில் வந்து தாங்களே அனைத்துப் பொருட்களும் கொண்டு வந்து, அவர்களே பானை வைத்து பொங்கலோப் பொங்கல் எனப் பொங்கல் இட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பொங்கல் வழங்கினர்.
நிகழ்சியின் முடிவில் மாணவிகள் அய்னுல் அஸ்மி மற்றும் இசக்கியம்மாள் நன்றி கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக