குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் திருக்குறள் வார விழா கருத்தரங்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 ஜனவரி, 2026

குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் திருக்குறள் வார விழா கருத்தரங்கம் !

குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் திருக்குறள் வார விழா கருத்தரங்கம் !
குடியாத்தம் , ஜன ‌6 -

வேலூர் மாவட்டம் குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் திருக் குறள் வார விழா கருத்தரங்கம் 5.1.26 திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. எபநேசர் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு கல்பனா வரவேற்புரை வழங்கினார் விலங்கியல் துறை தலைவர் சிவகுமார் கணிதத்துறை பேராசிரியர் முனைவர் ஸ்ரீதர் இயற்பியல் துறை தலைவர் முனைவர் தாமரை வரலாற்றுத் துறை தலைவர் விஜயரங் கம் வேதியியல் துறை தலைவர் முனை வர் தமிமுன்அன்சாரி ஆகியோர் முன்னி லை வகித்தனர். கருத்துரையாளர்கள் பேராசிரியர்கள் முனைவர் வளர்மதி முனைவர் தமிழ்ச்செல்வன் முனைவர் முகமது அலி ஜின்னா முனைவர் குமாரி முனைவர் சுஜாதா முனைவர் தமிம்மன் சூர் ஆகியோர் திருக்குறளில் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகளை வழங் கினர் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் பா. சம்பத்குமார்  சங்கீதா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத் தினர் முனைவர் கோ ருத்ரமூர்த்தி நன்றி கூறினார். தமிழ் துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad