சுமார் 1 கோடியே 70 லட்சம். மதிப்பீட்டில் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன பேருந்து ஒப்படைப்பு !
குடியாத்தம் ,பிப் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பாக. அத்தி இயற்கை மருத்து வக் கல்லூரிக்கு. மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன பேருந்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி.internationl. துணைத் தலைவர் முருகானந்தம் தலை மை தாங்கினார். இதில். தெலுங்கானா. முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். டாக்டர் பி. சௌந்தர ராஜன் அம்பாலால் குழமம். தலைவர்
ஜவுரிலால். ரோட்டரி ஆளுநர் வி சுரேஷ். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜே கே என் பழனி எஸ் பி டி குடும்பம் அமின் சாஹிப்
கே எம் ஜி கல்வி நிறுவனங்கள் செயலா ளர் கே எம் ஜி ராஜேந்திரன் வழக்கறிஞர் கே எம் பூபதி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அத்தி . இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு சுமார் ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் உள்ள பேருந்தை ஒப்படைத் தனர் இந்நிகழ்ச்சியில் அத்தி இயற்கை கல்லூரி பேராசிரியர்கள் செவிலியர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக