கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அடுத்த கொற்றிகோடு பகுதியில் விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடந்த ஆட்டோவில் பயணித்த பெண் பயணிகள் வெளியில் வர முடியாமல் சிக்கினர்.
இந்நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் கவிழ்த்து கிடந்த ஆட்டோவின் உள்ளே சிக்கி காயம் பட்டவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட எஸ்பியின் பொது சேவையையும் கரிசனத்தையும் எண்ணி மாவட்ட
எஸ்பி க்கு நன்றி கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக