திருப்பூர் மாவட்டம் தாராபுரம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சின்னக்கடை வீதி கிளையின் சார்பாக அர்ரிளா அரபி பாடசாலையின் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மஸ்ஜிதுர் ரஹ்மான்பள்ளிவாசலில் நடைபெற்றது இந்நிகழ்விற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயலானி தலைமை தாங்கினார்.கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் பேச்சாளர் சேக் MISCசிறப்புரையாற்றினார்.மேலும் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் அப்துல்லா, செயலாளர் முபாரக்,பொருளாளர் ஜலால்,துணைத் தலைவர் ஜுபைர்,துணைச் செயலாளர் ஜாபர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் துணைத் தலைவர் ஜுபைர்நன்றி உரை நிகழ்த்தினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக