தமிழக முதலமைச்சர் காணொளி வாயி லாக தந்தை பெரியார் அரசு பொறியில் கல்லூரி திறப்பு! ஆட்சியர் பங்கேற்பு !
வேலூர் , பிப் 16 -
வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு வகுப்பறைகள் 8 ஆய்வுக்கூடங்கள் பணிமனை மற்றும் கழிவறை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து இன்று (16.02.2026) காணொளி காட்சி வாயிலாக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.7.56 கோடி மதிப்பில் 4 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள், பணிமனை மற்றும் கழிவறை தொகுப்பு கட்டடத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் லிவிசா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக