2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகன சோதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 மார்ச், 2026

2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகன சோதனை.

2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன

கன்னியாகுமரி மாவட்டம்: நாகர்கோவில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்-வாகன சோதனையின் போது போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என சோதனை மேற்கொண்டனர், 

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பு நோக்கில் இந்த பறக்கும் படை வாகன சோதனை நடைபெற்று வருகிறது மேலும் இந்த சோதனையில் ஜிபிஎஸ் கருவி மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆறு சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட குமரி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பறக்கும் படை வாகனங்கள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad