தாராபுரம் ஜவகர் நகர் காளியம்மன் திருவிழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் பக்தி ஊர்வலம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

தாராபுரம் ஜவகர் நகர் காளியம்மன் திருவிழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் பக்தி ஊர்வலம்!



தாராபுரம் ஜவகர் நகர் காளியம்மன் திருவிழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் பக்தி ஊர்வலம்!

அமராவதி ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம்: 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அம்மன் சிலை உடன் பங்கேற்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜவகர் நகர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பக்தி சிறப்புடன் வழிபாடு நடத்தினர்.


விழாவின் ஒரு பகுதியாக தாராபுரம் அமராவதி ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து பக்தி ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் “அம்மன் அருள்” என கோஷம் எழுப்பியபடி பெண்கள் தலையில் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.


இந்த ஊர்வலம் அமராவதி ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து தொடங்கி பெரிய கடை வீதி, காவல் நிலைய வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசித்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.


முளைப்பாரி  கிராமத் தெய்வ திருவிழாக்களில் நடைபெறும் முக்கியமான பாரம்பரிய வழிபாட்டு முறையாகும். பொதுவாக நவதானியங்கள் முளைக்க வைத்து அதை தலையில் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக செல்வது வழக்கம். இது நல்ல மழை பெய்யவும், நிலம் வளமாக இருக்கவும், குடும்பத்தில் வளமும் நலமும் பெருகவும் அம்மனை வேண்டி நடத்தப்படும் வழிபாடாக கருதப்படுகிறது.



தாராபுரம் ஜவகர் நகர் காளியம்மன் திருவிழாவிலும் பெண்கள் பக்தி உணர்வுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டது பக்தர்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad