ஸ்ரீவைகுண்டம் மார்ச் 20. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவது ஆன திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு நித்தியல். 9.15 மணிக்கு மாடவீதி புறப்பாடு நடந்தது.
11.15 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். பின்னர் தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன். திருவேங்கடத்தான். பட்சி ராஜன் .சேஷகிரி. அனந்த வெங்கடேசன். மதுரகவி. அனந்த ஆழ்வான் ஆகியோர் சேவித்தனர். சாத்துமுறை முடிந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் காய்சினவேந்தன் தாயார்களுடன் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். பின்னர் தொட்டி பல்லக்கில் சாற்றப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 9.15 மணிக்கு தெப்பத்தில் காட்சி தந்தார். 12 சுற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். கோபாலகிருஷ்ணன். சௌந்திரராஜன் . கோகுல் ஸ்ரீராம். காசி. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். சீனிவாசன் . கண்ணன். திருவேங்கடத்தான். ஸ்ரீகிருஷ்ணன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி
அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக