பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் கல்லூரி மாணவி மற்றும் காதலன் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மார்ச், 2026

பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் கல்லூரி மாணவி மற்றும் காதலன் கைது.

பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் கல்லூரி மாணவி மற்றும் காதலன் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட் புதரில் ஒரு பக்கெடில், அடைக்கப்பட்டு இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை.

பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொன்ற நர்சிங் மாணவி ரெஜினா(20) மற்றும் அவரது காதலன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த முகேஷ்(25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் பிறந்த சில மணி நேரத்தில் வெளியே வீசி கொன்றது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad