வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளி ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாள் விழா !
குடியாத்தம் ,ஏப்ரல் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் உள்ளி ஊராட்சியில் டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திரு வி.ஜெய்சங்கர் அவர்கள் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாள ராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி.தலித் குமார் அவர்கள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்ச்சி யை வேலூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சி துணைத் தலைவர் திரு.மது அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்வில் உள்ளி ஊராட்சி மணிகண் டன் சக்திவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக