பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் "சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம் தொடக்கம்.
விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் என்ற உயரிய இலக்கை நோக்கி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாலை பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல பொதுமக்கள் இணைந்து செயல்படும் போது மட்டுமே விபத்தில்லா சமூகத்தை உருவாக்க முடியும்" என்று வலியுறுத்தினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக