கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நள்ளிரவு ரோந்து ஆய்வில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நள்ளிரவு ரோந்து ஆய்வில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நள்ளிரவு ரோந்து ஆய்வில் காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின்

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்டம் முழுவதும் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad