ரயில்வே பாதையில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத இரண்டு ஆண் சடலம் அடக்கம் !
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் அறிவுறுத் துடன் படி மே மாதம் 6 தேதி மற்றும் 15 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் வாலாஜா மற்றும் சோளிங்கர் பகுதி களில் ரயில்வே பாதையில் ரயிலில் அடி பட்டு சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத் தக்க ஆண் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டது. இந்நிலையில் இரண்டு சடலங் களையும் காட்பாடி ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு அடுக் கம்பாறை அரசு மருத்துவமனை சவக் கிடங்கள் வைத்தனர் அவர்களைப் பற்றி விளம்பரம் செய்தும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் குடியாத் தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க சாசனத் தலைவரும் உயிர் அறக்கட்டளை நிறுவனமான சமூக சேவகர் ரொட்டேரி யன் எம் கோபிநாத் அவர்களை தொடர்பு கொண்டு இரண்டு உடலை அடக்கம் செய்ய வேண்டுகோள் வைத்தார் உடனடி யாக ரோடேரியன் எம் கோபிநாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைப் பெற்றுக் கொண்டார் இறந்தவரின் உடலை சமூக சேவகர் எம்.கோபிநாத் வேலூர் மாநகராட்சி வழிகாட்டுதலின்படி உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு கள் செய்தார். பின்னர் அவர் அவரது சொந்த செலவில் வேலூர் பாலாறு இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார்.
காட்பாடி ரயில்வே போலீஸ் சக்திவேல் கோபிநாத்துக்கு தேவையான ஆவணங் களை வழங்கினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக