சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை , ஜூலை 30 -
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்தனர். சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் களை தாக்கிய தமிழக வெற்றிக் கழகம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மருத் துவர் கபில் மற்றும் அவருடைய சகோத ரர் உட்பட ஆதரவாளர்கள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கி னார்கள்.இதனைத் தொடர்ந்து முத்துக் கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட செய்தியாளர்கள் அனைவரும் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக