இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பட்டதாரி இளைஞர் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு !
வேலூர் , ஜூலை 24 -
வேலூர் மாவட்டம் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பட்டதாரி இளைஞர் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு !
விஜயராஜ், 29 வயதான கணினி அறிவி யல் பட்டதாரி. இவர் ஒரு தனியார் நிறு வனத்தில் பணிபுரிகிறார். இவரது தந்தை கனகராஜ், மின்சார வாரியத்தில் பணி புரியும் ஒரு லைன் இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது தாயார் பெயர் ஜமுனா, ஒரு இல்லத்தரசி. இவர் சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஜூலை 22 ஆம் தேதி ஷேன்பாக்கத்தல் இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். சிகிச்சை பலனளிக் காததால், 23 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக் கப்பட்டார்.இதனை தொடர்ந்து இவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதை தொடர்ந்து இவரது இதயம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையாலும், நுரை யீரல்கள் சென்னை ரேலா மருத்துவ மனையாலும் எடுக்கப்பட்டன. கல்லீரல், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் வேலூர் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனை யாலும், ஒரு சிறுநீரகம் வேலூர் நாரா யணி மருத்துவமனையாலும் எடுக்கப் பட்டன. திருமணமாகாத இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர் என மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக